வியாழன், 18 நவம்பர், 2010

kavithai 13

மண் பாண்டம்.

மல்லிகைப் பூப்போல‌
வெள்ளையாய் பூத்து சிரிக்கும்
பொன்னி அரிசியின்
மண் பானைச்சோறும்

ஆரவாரமில்லா ஆற்றின் கரையில்
ஆர்ப்பரித்துத் திரியும் அயிரமீனின்
கை பக்குவத்தில் கொதிக்கும்
ம‌ண்ச‌ட்டிக் குழ‌ம்பும்

ஊரெல்லாம் ம‌ன‌ம் ப‌ர‌ப்பும்
நாவெல்லாம் ருசி நாடும்.
ஆகார‌த்திற்கு ஆதார‌மான‌தால்
மாந்த‌ர்க்கு ம‌ண்பாண்ட‌ம் உற‌வான‌து.

கால‌ ஓட்ட‌த்தில் ம‌ண்பாண்ட‌ம்
காணாம‌ல் போனாலும்...ம‌னித‌ன்
கால‌ங்கால‌மாய் காட்டிய‌ ப‌ரிவுக்கு
ந‌ன்றிக் க‌ட‌னாய்

ம‌ர‌ண‌முற்ற‌ மாந்த‌ர்க்குக்
கொள்ளி போட‌
ம‌ண்பானை இன்னும்
வாழ்ந்து கொண்டு தான் இருக்கிற‌து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக