பூமியில் பூகம்பம்
ஆட்டம் எதற்கு உனக்கு?
நிலமகளே..நீ
குலமகளா இல்லை விலைமகளா?
குலுக்கலாட்டம் உனக்குமா?
ஆட்டத்தின் ஆரம்பம்
அரங்கத்திலா..நீரின்
அந்தரங்கத்திலா?
காணுமிடமெல்லாம்
காற்றும் மழையும்
சுழன்றடித்து
புவியை புரட்டி எடுத்தது
உன் ஆட்டத்திற்கு
தொலைக்காட்சி விளம்பரமோ?
மானுடம் கோள்களை
வணங்கியதுண்டு
மானுடத்தை கோள்கள்
மதித்ததுண்டா?
அரிசி கொடுத்து
பசியை போக்கியவள் நீ,
உன் பெரும்பசிக்கு
மண்ணையே வாய்க்கரிசியாக்கி
மனிதர்களை புதைத்து
விழுங்கியது
என்ன நியதி?
(காஷ்மீர் பூகம்பத்தில் மக்கள் மாண்டபோது)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக