நீ ஒரு அவதாரம்.
உன்னைக்
கைப்பிடிக்கவில்லை
அடித்தாலும்
உதைத்தாலும்
என்னை விட்டுப் பிரிந்ததில்லை.
விவாகம்
காணாத போது
விவாகரத்து
உனக்கெதற்கு?
அறுந்தாலும்
பிரியாதது உன் உறவு.
இருந்தாலும்.. நீ
படிதாண்டியதில்லை.
காலணியே!
தாரமல்ல எனக்கு
நீ ஒரு அவதாரம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக