ஊடலா இல்லை கூடலா?
நடை பயின்று நடந்து வந்து
நான் பார்க்க விழுந்த்வளே!
உன் பெயரென்ன?
குற்றால அருவியோ!
நீ விழும் வேகத்தில்
உனக்கொன்றும் ஆகாமல்
தலை கொடுத்துத் தாங்கும்
தர்மவான்கள் யார்?
உன்னை அறிந்த மனிதர்களோ!
தாங்கிப் பிடித்ததினால்
ஆண் பெண் என பாராமல்
அனைவரையும் அரவணைக்கும்
கருணைக்கு பேரென்ன?
நன்றிக்கடனோ!
இடையில் இருக்கும் ஆடையை
இழுத்துமே நீ அணைத்தாலும்
விழாது பிடித்து...மனம்
மகிழ்ச்சியில் மயங்கும்
நிலைக்கு பேரென்ன?
ஊடலா இல்லை கூடலா!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக