வெளிச்சம் இன்னும் சேரலையே.
ஊருக்கு ஓரத்திலே
ஒத்தையாய் நிக்குதடி
ஒசந்து நிக்கும் ஆலமரம்.
ஆலமரக்கிளைகளிலே
வானத்து விண்மீன்கள்
வந்திறங்கி வந்தது போல்
காட்சி தந்து கண் சிமிட்டும்
ஓராயிரம் மின்மினிப் பூச்சிகள்
ஒளிகூட்டி நின்றாலும்,
என் அத்தானைக் காணலையே
இந்த அத்தமக நெஞ்சினிலே
வெளிச்சம் இன்னும் சேரலையே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக