தாமரையும் காத்திருக்கு.
நீருக்குள் நீ இருந்தால்
ஊருக்குத் தெரியாதென்று
உன் முகத்தை வெளியில் காட்டி
ஊர் முகத்தை உன்னில் ஈர்க்கும்
தாமரைப் பூவே!
உன் அழகு முகத்தை
பவழத்தால் அலங்கரித்து
இதழ்களுக்கு இளஞ்சிவப்பில்
வண்ணம் தீட்டி
வெண்முத்துக்கள் உன் கையில்
உருண்டு விளையாட
வெள்ளிக் கொலுசுகளோ
உன் காலைச்சுற்றி வந்து விளையாட
மாந்தரைப்போல் மணம் காண
பருவ மங்கையாய் பூத்து
ஒற்றைக்காலில் நின்று
தவம் புரியும்
தாமரையும் காத்திருக்கு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக