புதன், 2 செப்டம்பர், 2015

வாழ்த்துக்கள் சொல்லும்


மணமேடையில்
மங்கள நாணும்
மலர் மாலையும் சூடி
மகிழ்வோடு வீற்றிருக்கும்
மணப்பெண்ணுக்கு
வாழ்த்துக்கள் சொல்லும்

மங்கள நாணில்
தடம் பதித்தத் தங்கம்
“எப்போதும் உன்னோடு
கூடவே நானிருப்பேனென
தைரியம் தந்து”
வாழ்த்தி மகிழ்ந்தது

மார்பை அலங்கரிக்கும்
மலர் மாலையோ
“மலரோடு சேர்ந்த
நாரும் மணப்பதுபோல்
என்றென்றும்சேர்ந்து வாழ”
வாழ்த்தி வணங்கியது

வாசலில் விடப்பட்ட
மிதியடிகளோ
“தங்களைப் போல்
எப்போதும் படிதாண்டா
பத்தினிபோல்”இணைந்து வாழ
வாழ்த்துகூறி மகிழ்ந்தன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக