ஒன்றே குலம்
ஒருவனே தேவனென
அறியவைக்கும் ஆன்மீகம்
அடக்கமானது,
அக வாழ்க்கையை
செம்மையாக்குவது
தன்னைப் பற்றி
அறிந்து கொள்ள
உதவும் ஆன்மீகம்,
வாழ்க்கைக்கு
எதுயெது தேவையற்றது
என்பதையும் உணர்த்தும்
மனித நேயம் தழைக்க
மக்களுக்கு அன்பையும்
அஹிம்சையையும்
அளித்துக் காத்திடும்,
பிற உயிர்களுக்காக
இரங்குதலே ஆன்மீகம்
உயர்கல்வி இளமைக்கு
சிறப்பு தருவது போல்
ஆன்மீகம்
முதுமைக்கு அமைதியும்
நிம்மதியும் தந்து
உயர்வளிக்கும்
எங்கும் நிறைந்திருக்கும்
எம்பெருமானை
செயல் தூய்மையோடு
தனக்குள் தேடி
அடைவது தான்
உண்மையான ஆன்மீகம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக