வியாழன், 3 செப்டம்பர், 2015

அருணாசல பிரதேஷ்


பனி படர்ந்த மலைநாட்டில்
பணி புரிந்து வாழ்ந்தபோது
உறைகுளிரும் அடைமழையும்
ைகோர்த்த பொழுதுகளில்
ுளிருக்கான அர்த்தத்தினை
உணர்ந்து அறிந்தது மனம்

அடுத்த ஊர் பயணத்தில்
நடுக்காட்டில் மாட்டியபோது
எரியும் தணலின் ருசிதேடி
அகமும் புறமும் ஏங்கித்தவிக்கும்
உடலின் வேதனையை
உணருமா இந்த மலைநாடு?

இடமாற்ற உத்தரவால்
இந்த மலைநாட்டை பிரிந்து
ண்டுகள் பல கடந்தாலும்
ாயைப் பிரிந்த சேயைப்போல்
க்களையும் குளிரையும்
மறக்க மனம் கூடுதில்லை

ேற்றூரில் வாழ்ந்து
மறந்திருந்தாலும்
மலைகளைக் காணும்போது
மனம் மலர்ந்து மணக்கிறது
மறையாத நினைவுகளாய்
ாழ்ந்த அந்தத் தருணங்கள்

ஓய்வு பெற்று வாழ்ந்தாலும்
நலம் குன்றி படுத்தாலும்
கனவுகளில் வந்துபோகும்-அந்தக்
குளிர் பொழுதில் நடுங்கியதும்
கள்ளங்கபடமற்ற மக்களின்
நினைவுகளும்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக