திங்கள், 28 செப்டம்பர், 2015

நற்சிந்தனை



சிரித்து மகிழ்ந்திரு
பரிவும், பாசமும் பக்கம் வரும்
சினமும், பகையும் தூர விலகும்

கல்வி கற்று அறிவை பெறு
உன்னில் நம்பிக்கை வை
வாழ்க்கை சிகரம் தொடும்

எல்லோரும் வாழ
இறைவனை வேண்டு
உன் உயிரும் காக்கப்படும்

ஆத்ம சுத்திக்கு
ஆண்டவனை வழிபடு
அழிந்துபோகும் சினம்

வெறுக்காதே பிறரை
விவேகமல்ல—அது
வழி வகுக்கும் உன் அழிவுக்கு

கவலையை நீக்கு
கடமையை செய்
காலனும் அஞ்சுவான்

முக நூலையும், தொலைபேசியையும்
விட்டு விலகு
விவாகரத்து கூட வெளியேறும்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக