ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

மறுமையைத் தேடி





இலையுதிர்
காலம் போல்
காலன்
எடுத்து விட்ட உயிர்

போன உயிரால்
பட்டுபோன மலர் போல்
மண்ணில்
படுத்து விட்ட உடல்

மனித வாழ்வில்
மரணத்தில் மட்டுமே
ஏற்றத் தாழ்வு
இல்லாத நேரம்

காலும் வாயும்
கட்டு பட்டு
மலர் மாலை
துணையோடு
                 
காலமானதைக்
காட்டும் மரணம்
பயணம் தொடங்கும்

மறுமையைத் தேடி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக