பாரதப் போரின் பதினேழாம் நாள்
கணை துளைத்து நிலை குலைந்த
கர்ணனைப்போல்
சரியும் இந்திய இறையாண்மை
அணு அணுவாய் உயிர் பிரியும்
குந்தி தேவியின் பிள்ளைபோல்
ஒவ்வொரு நொடியும்
செத்து மடியும் ஒருமைப்பாடு
பாரதப் போரில் மடிந்த
அப்பாவி மக்கள் போல்
இன்றும் வறுமையில் வாடி
மரணப்படும் ஏழைகள்
இந்திய தேசம் விட்டு
இடமாறி வெளிநாட்டில்
வாசம் செய்யும் பெருஞ்செல்வம்
வந்து உதவாதோ!
கருமையெனக் கூறினாலும்
வறுமைக்கு பாவமில்லை
வராமப்போனாத்தான்
பாவம் ஏழை உயிர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக