திங்கள், 28 செப்டம்பர், 2015

புராதன சின்னம்



காலமெல்லாம்
கடுந்தவம் புரிவது போல்
கால் கடுக்க நிற்கும் நீ
காவலனா இல்லை காணலனா?

ஊருக்கு வெளியில் தான்
உன் வாசம்—இருந்தும்
உன்னிடம் வரும் மாந்தருக்கு
உதவாமல் இருப்பதில்லை

கரம் நீட்டி உதவும்
கருணையுள்ள மாந்தர் போல்
கல்லுக்குள்ளும் ஈரமுண்டு
தலை கொடுத்துத் தாங்குவதால்

பலனேதும் பாராமல்
பலரது பாரம் சுமந்துதவும்
புராதன சின்னம் போல

பழமையான சுமைதாங்கி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக