திங்கள், 21 செப்டம்பர், 2015

தாயோடு போய்விடும்




இறைவன்
எல்லா இடங்களிலும்
இருக்க முடியாதென
அன்பின் உருவான
தாயை படைத்தான்

கோவிலில் வீற்றிருக்கும்
கடவுள் கூட
கூப்பிட்ட குரலுக்கு
வரமாட்டான்
தாய் நிச்சயம் வருவாள்

பிறந்த குழந்தை—முதலில்
அறிந்து கொள்வது
அன்னையைத்தான்,
காக்கைக்குத் தன்
குஞ்சும் பொன் குஞ்சு தான்

உலகில் அழகுமிக்கக்
குழந்தை ஒன்றே
ஒன்று தான் உண்டு
அதை ஒவ்வோர்
தாயிடமும் காணலாம்

கருவாக்கி உருவாக்கி
வளர்த்து ஆளாக்க
தன்னை மெழுகாக்கிக்
கரைபவளும்
தாய்க்கிணை தாயே தான்

தாவரத்தின் ஆதாரம்
வேரைப் போன்று
குடும்பத்தின் ஆதாரம்
தாயைத் தவிர
வேறு யாருமில்லை

உற்றார் உறவினர்கள்
வெறுத்து ஒதுக்கினாலும்
எந்த நிலையிலும்
தாய் தன் பிள்ளையைக்
கை விட மாட்டாள்

தேரோடு திருநாள்
போனது போல்
மண்ணில் பிறந்த
உயிர்கட்கு—அன்பு

தாயோடு போய்விடும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக