ஞாயிறு, 11 ஜனவரி, 2015

கரை சேர்த்தது.


கற்ற நிறை கல்வியும்

கையிலிருக்கும் காசும்

துணை நிற்க

 

பொல்லாத வறுமையும்

இல்லாத வேலையும்

சொல்லாம விரட்ட

 

சொந்த பந்தமும்

நட்பு வட்டமும்

சோகமாய் வழியனுப்ப

 

நீலக் கடலையும்

நீலவண்ணக் கண்ணனையும்

நெஞ்சார வணங்கி

 

பிழைக்க வழிதேடி

பிற தேசம் செல்ல

படகில் பயணம் தொடக்கம்

 

அழைக்காத

அயல் நாட்டில்

அடியெடுத்து வைக்க

 

நம்பி வந்தவனை

இறைவன்

நடுக்கடலில் விட்டதில்லை

 

கள்ளத்தோணி

கரை சேர்த்தது

சிறையில் வாட.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக