திங்கள், 5 ஜனவரி, 2015

தாகம்.


தண்ணீர் தந்து

தாகம் தணிப்பது

தர்மமல்ல

தகுதிக்கு மீறிய

செயலுமல்ல—அது

சமுதாயத்திற்கு

செய்யும் கடமை

 

புரிந்து கொண்டு

உதவியவர் பாபா

ஒரு சந்நியாசி,

புரியாமல்

செயல்படும்

அனைவரும்

தன்னலம் காக்கும்

சுகவாசி தான்

 

பாபா அவர்கள்

துறவறம் பூண்டாலும்

சமூகத்தைத் துறக்காத

சந்நியாசி

இந்தப் பற்று

எல்லோருக்குமிருந்தால்

இந்திய தேசம்

எப்பவோ உயர்ந்திருக்கும்

 

கருநாகமோ

கருநாடகமோ—எதுவோ

கருப்பு நாடகம் தான்

கண்ணுக்கு தெரிகிறது,

பாபா இறந்தாலும்

அவராற்றிய சேவைகள்

ஈரமாய் நெஞ்சில்

என்றும் வாழும்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக