திங்கள், 5 ஜனவரி, 2015

மது


ஏழ்மை

இயலாமை

விலைவாசி இறங்காமை

போன்றவற்றால்

வாழமுடியாமை

 

ஒரு ஆமை

உள்ளே நுழைந்தாலே

விலங்காதென்பார்கள்

இத்தனை ஆமைகளும்

வீட்டுக்குள் வந்தால்

உருப்புடுமா?

 

தாலி கட்டிய மாது

வீட்டிலிருந்து

காத்து நிற்கையில்

காலில்லா மாது

கவலை போக்கி

நிம்மதி தருமென்றால்

நம்பலாமா?

 

ஆசை காட்டி

மோசம் செய்யும்

சீட்டு கம்பெனிகள்

சுருட்டுவதுபோல்

கவலையும், களைப்பையும்

கலைவதாய் சொல்லி

அடிமையாக்கி—உயிரை

எடுத்து கொள்ளும்

 

உயிரை அழிக்கும் மது

இளமையில் உறவாடி

இரத்தத்தில் கலந்து

முதுமையில்

மூளையையும்

நரம்பையும்

சீர்குலைத்து

மனிதனையே

முடிவில் குடித்து விடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக