உழைக்கும் மாந்தர்கள்
ஓய்வெடுத்து
உடல்வலி போக்க
இயற்கை அருளியது
இருளெனும் இரவு
இருள்
அமைதியின் அந்தரங்கம்,
கற்பனைக் காட்சிகள்
அரங்கேறும்
கலையரங்கம்
ஆவிகளின் நேரமோ,
ஆன்மாக்கள்
உலா வரும் காலமோ
யான் அறியேன்
ஆண்டவனுக்கே
வெளிச்சம்
ஆண்கள்
அலைந்து திரியும் நேரம்,
கனவுகள் காணும்
பெண்கள்—தொலைபேசியில்
தொலையும் நேரம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக