வெள்ளி, 9 ஜனவரி, 2015

இருள்


உழைக்கும் மாந்தர்கள்

ஓய்வெடுத்து

உடல்வலி போக்க

இயற்கை அருளியது

இருளெனும் இரவு

 

இருள்

அமைதியின் அந்தரங்கம்,

கற்பனைக் காட்சிகள்

அரங்கேறும்

கலையரங்கம்

 

ஆவிகளின் நேரமோ,

ஆன்மாக்கள்

உலா வரும் காலமோ

யான் அறியேன்

ஆண்டவனுக்கே வெளிச்சம்

 

ஆண்கள்

அலைந்து திரியும் நேரம்,

கனவுகள் காணும்

பெண்கள்—தொலைபேசியில்

தொலையும் நேரம்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக