வெள்ளி, 16 ஜனவரி, 2015

தர்மத்தை அழிப்பதன்றோ!


தாயிழந்த பிள்ளை

தனியாய்க் கதறியழுது

தாய் தேடி தவிக்கையிலே

தாயாய் கரம் நீட்டி

 

தாங்கி சுமந்த அந்தத்

தாயோட தாய்

தெய்வத்தின் திருஉருவாய்

தன்னையே அர்ப்பணித்து

 

தள்ளாத வயதிலும்

தங்கத்தைக் காப்பதுபோல்

சீராட்டி வளர்த்து—பேரன்

சிகரம் தொட்டிட

 

பாட்டி பட்ட துயரை

எண்ணி பார்க்காம

ஐந்தாறு தெய்வங்கள்—ஒரு

ஆலயத்திலிருப்பதுபோல்

 

முடியாத வயதில்

முதியோர் இல்லத்தில் விட்டது

தெய்வத்தை சிறைபடுத்தி

தர்மத்தை அழிப்பதன்றோ!

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக