ஞாயிறு, 11 ஜனவரி, 2015

அஞ்சி ஓடாதோ!


விலைவாசி உயர்வால

மருத்துவ கட்டணமும்

மருந்துகளின் விலையும்

அச்சம் ஏதுமின்றி

உச்சம் தொடுகிறதோ!

 

இல்லாத குறையால

வறுமையில்

உச்சம் தொட்ட ஏழைகள்

அன்றாட சோற்றுக்கு

அச்சம் கொண்டதாலோ

 

போலி மருத்துவர்கள்

மலிந்து போனார்கள்—தவறுக்கு

ஏழைகளின் உயிரை

காணிக்கையாக்கி

பரிகாரம் தேடுகின்றனரோ!

 

பங்கு சந்தைபோல்

ஊழலின் ஏற்றத்தால்

ஏழையின் உயிர்

இறக்கம் கண்டு

இறந்து போகிறதோ!

 

மண்ணில் தோன்றிய

மாந்தரை

மண்ணில் விளையிற

இலையும் மூலிகையும்

காத்து அருளாதோ!

 

இஞ்சி, மிளகு, திப்பிலி

சித்தரத்தை,சுக்கு என

அஞ்சுமிருந்தால்

எந்த நோயும்

அஞ்சி ஓடாதோ!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக