வெள்ளி, 16 ஜனவரி, 2015

இன்னும் ஏராளம்.


இரை தேடிய சிங்கம்

மானை விரட்டி தோற்றாலும்

தாயை இழந்து தவிக்கும்

மான் குட்டிக்கு

துணையாயிருந்து

கருணை காட்டியதும்

 

இரயில் நிலையத்தில்

இரை தேடிய குரங்கொன்று

மின்சாரம் தாக்கி விழ

மற்றொரு குரங்கு

கற்றறிந்ததுபோல்

கடைசி வரை போராடி

உயிர் காத்த பண்பும்

 

நன்றியுள்ள நாயானாலும்

தேங்கிய மழை நீரில்

மின் கசிவையறிந்து

முன்பினறியா மனிதர்களை

தன் உயிர் கொடுத்து காத்த

நாயின் அறிவும்

 

மரியாதைக்குரியது,

மனிதநேயமற்று வாழும்

தற்கால மனிதர்கள்

வெட்கத்தை விட்டு

விலங்குகளிடமிருந்து

கற்க வேண்டியது

இன்னும் ஏராளம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக