புதன், 14 ஜனவரி, 2015

வேதனை தான்.


மறக்க இயலாத

மார்கழித் திங்களின்

மூடுபனியும், குளிரும்

ஆடவைக்கும்,

ஆண்டவன்

ஆட்டி படைப்பதுபோல்

 

போகி நினைவும்

பள்ளி விடுமுறையும்

சொல்லி வைத்ததுபோல்

விடிகாலை எழுப்பிவிட

தையை வரவேற்கும்

குழந்தைகள்

 

ஏற்றிய தீயில்

எரியும் தனலில்

கருகி, சாம்பலாகி

சம்பிரதாயமாகும்

குளிரும்,

பழையனவும்

 

ஊரே கொண்டாடி மகிழும்

போகிப் பண்டிகை

உழவர்களின்

வாழ்வையும், கனவையும்

சாம்பலாக்கி போனதும்

வேதனை தான்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக