வெள்ளி, 16 ஜனவரி, 2015

இதுவும் ஒரு காரணமோ!


பஞ்சம் பிழைக்கப்

பட்டணம் வந்ததுபோல்

ஒட்டிப் பிறந்த

இரட்டைக் குழந்தைகளாய்

ஏழ்மையும், ஊழலும்

என்றும் இந்த தேசத்தில்

 

வயதுக்கு வந்த

சொந்த பிள்ளைகளாய்

கண்டிக்கவும்,

தண்டிக்கவும் முடியாமல்

தான்தோன்றியாய்

தரணி போற்ற வளருது

 

இமயமலையும்

இமாலய ஊழலும்

இங்குதான் உள்ளது

வளரும் நாடாய்

வகைபடுத்தி சொல்ல

இதுவும் ஒரு காரணமோ!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக