திங்கள், 5 ஜனவரி, 2015

பொங்கல் பண்டிகை


இயற்கைக்கும்

மனிதனுக்கும்

இருக்கும் உறவை

பறை சாற்றும்

பண்டிகைகள்

தமிழ் நாட்டில்

குறைவில்லை

 

உழைப்புக்கும்

ஒற்றுமைக்கும்

உயர்வு தந்து

போற்றி வழிபட்ட

தருணங்களாய்த்

திருநாட்கள்

 

தித்திக்கும் கரும்பும்

கொத்து மஞ்சளும்

வைத்து

வேளாண்மைக்கு

படைக்கும் திருவிழா

பொங்கல் பண்டிகை

 

நீர் வளமும்

நிலவளமும் பெருகி

விவசாயம் செழித்து

மக்கள் நலம் பெற

பொங்கல் கொண்டாடி

வாழ்த்தி மகிழுவோம்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக