ஞாயிறு, 29 நவம்பர், 2015

சரிதானா?




குற்றம் தடுத்து
மக்களைக் காக்கும்
அரசு ஊழியர்
காக்கி சட்டை
சாட்சி சொல்லும்
பாதுகாவலரென

சட்டம்,ஒழுங்கு பராமரிப்பு
கிரிமினல் பாதுகாப்பு
வி.ஐ.பி பந்தோபஸ்து
அரசியலார், அதிகாரி
ஏவல்களென
பணிகள் ஏராளம்

தொந்திகள் சிலருக்கு
இருந்தாலும்
தொழிற்சங்கம் இல்லாதவர்
நாளும் கஷ்டப்படும் இவர்கள்
மக்களின் வீண்பழிக்கும்
ஆளாவதுண்டு

நியாயம், அநியாயம்
அறியாமல்
உணர்ச்சிகளுக்கு
அடிமையாகும் மக்களை
அடக்கமுடியாமல்—சிலநேரம்
தவித்து நிற்கும்

அதற்காக
ஏதும் செய்யாமல்
நெடும்மரம் போல்
பார்த்துக் கொண்டு
இருக்கவுமுடியாமல்
தடுமாறுவதுமுண்டு

சிலரின் செயலால்
சிறு தவறு நேர்ந்தாலும்—அவர்கள்
செய்யும் பணிகள்
செம்மையாய் இல்லையென
சுமத்தும் குற்றங்கள்
சரிதானா?



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக