ஓலக்குடிசையில்
ஓலச்சத்தம் இல்லாமல்
உதவி செய்ய
உனக்கு இன்னும்
தெரியலையே
கருணையோடு
கொட்டி கொடுக்கும்
உன் பேருதவி
உயிர்களுக்கு
வரப்பிரசாதமல்லவா!
காக்கும் பொறுப்பை
நீ அறிவாய்—அதனால்
ஓராண்டு பணியை
ஒரு சில நாட்களில் முடித்து
நிறைவு கொள்கிறாய்
நாங்களோ
வருடமுழுதும் உறங்கிவிட்டு
நீ வந்த பின்னே
உறங்காமல்
விழித்திருக்கிறோம்
உன் உதவியோ
ஒருவருக்கும் பயன் படாம
ஊரையே அழித்து
நாச படுத்தியது தான்
மிச்சம்
யார் செய்த பாவமோ
பொலிவிழந்த மங்கைபோல
சாலைகள்
முகத்தைக் காட்டாம—மூடி
மறைத்துக் கொள்கிறது
தண்ணீருக்கு
தவிக்கும் மக்கள்
சேமித்து வைக்க—பொறுப்போடு
நடந்து கொள்ளாதது
மழையா? மக்களா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக