திங்கள், 30 நவம்பர், 2015

பாயும் பகைதான்


பாராமல் கெடும்
பயிரைப் போல
சேராமல் கெடும்
உறவுகள்

இசையோடு
உறவிருந்தால்
மனம்
அமைதி பெறும்

நல்ல புத்தக
உறவிருந்தால்
நன்னெறியும்
நன்மையும் தரும்

உலகில்
நம்பத்தகுந்த
மாந்தரெல்லாம்
சிறந்த உறவுகளே

நட்பில் வரும்
உறவு
நட்டாற்றில்
விட்டு விடாது

நடக்கும் வரை
நாடெல்லாம் உறவு
படுத்து விட்டால்

பாயும் பகைதான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக