வியாழன், 5 நவம்பர், 2015

நிமிர்ந்து தான் நிற்கிறது



ஊன்றிய கால்
சரியா தவறாவென
சரிவர தெரியவில்லை
இன்னும்

சுற்றி நின்றுகொண்டு
பெருமைபட்டுக் கொள்கிறது
தன்னால் தான்
காக்க முடியுமென்று

நேர்த்தியாக இருக்கத் தெரியாமல்
சில நேரங்களில்
வரம்பு மீறி
வரப்பைத் தாண்டி விடுவதுமுண்டு

அடுத்தவர் நிலத்தை
ஆக்கிரமித்தால்
சும்மா விடுவார்களா?
காலை ஒடிப்பார்கள்

இருந்தாலும்—வேலிக்கால்
ஏதுமறியாததுபோல்
நிமிர்ந்து தான் நிற்கிறது
அலையப்போவது மனிதன் தானே!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக