வியாழன், 12 நவம்பர், 2015

அழைத்து செல்கிறாளோ!





தந்தை ஆதவன்
தந்த அருளால்
புகுந்த வீடான
மலையகம் செல்லும்
மருமகளாய்
நீர்த்துளிகள்

காலம் நகர
தாயைக் காண
தவித்த அவள்மனம்
கூடப்பிறந்த காற்றை
துணைக்கழைத்து
அவனோடு புறப்பட

மழைத் துளியாய்
மகள் திரும்பி வந்ததை
கடல் அன்னை
அலைகளை அனுப்பி
ஆரத்தியெடுத்து

அழைத்து செல்கிறாளோ!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக