செவ்வாய், 3 நவம்பர், 2015

சிரிப்பை தொலைத்ததால்




ஏகாந்தமாய் நின்றிருக்கும்
ஏழைக் குடிசை ஒன்று
எப்போதும்போல்
மூடிக்கிடக்கும் குடிலுக்குக்
கூரை முழுதும் வாசல்கள்,
மழையாய் நுழையும்
வருணபகவான்
தடம் பதித்து புனிதமாக்க,
சூரியனும் சந்திரனும்
தெய்வங்களாய் வந்து
தரிசனம் தந்து மகிழ்வதால்
குடிசையொன்று கோயிலானது,
வசிக்கும் ஏழை மட்டும்
இறைவனாகவில்லை

சிரிப்பை தொலைத்ததால்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக