சனி, 28 நவம்பர், 2015

எனக்கு பிடிக்கும்


விடிகாலைப் பொழுதில்
உழைக்கத் தொடங்கி
வீடும், நாடும்
முன்னேற பாடுபடும்
மக்களைப் பிடிக்கும்

இரவல், யாசித்தல்
இலஞ்சம், ஊழல் இல்லாது
உழைப்பின் ஊதியத்தில்
உயிர் வாழும்
பண்பாடு பிடிக்கும்

நற்கொள்கை கொண்ட
நேர்மையான மனிதராய்
சாதிக்கும், பதவிக்கும்
அலையாத
அரசியலார் பிடிக்கும்

வறுமையின்றி
வசதியோடு வாழ
மக்களின் நலனில்
அக்கரை கொள்ளும்
அரசு பிடிக்கும்

அறிவும், ஆற்றலும்
நிறைந்த மக்களும்—வளம்,
நீதி, நேர்மையோடு
பொருளாதாரமும் சிறக்கும்

நாடு பிடிக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக