வியாழன், 12 நவம்பர், 2015

சத்தியமா அதுவே தான்




சின்னப் புறாவே
சமாதானச் சின்னமே,
சிந்திக்காம தேவதத்தன்
உன்னை
கணையால் அடித்ததால்
சித்தார்த்தன் சித்தம் கலங்கி
சித்தனானான்
நீதி தேடி நெடும்பயணம்
தொடர்ந்தான்
புத்தனாக

சாதுக்களே
புத்த பிக்குகளே,
பண்புள்ள உங்களையா
வன்முறையாளனென
வண்ணம் தோய்த்து
சிறை பிடித்து
சித்திரவதை செய்வது!
அரக்கர்கள் அழியவில்லை
இரக்கமில்லா மனிதர்கள்
இன்னும் உயிர் வாழ்வதால்

புறாவின் துயருக்கே
பதறிய புத்தன்
பிக்குகளின் நீதிக்கு
உதவாமலிருப்பானோ?
கூண்டு திறக்கட்டும்
பெண்புறா ஒன்று
வெளியே வந்தால்
சனநாயகம் சாத்தியம் தான்
சாதுக்களின் எதிர்பார்ப்பும்
சத்தியமா அதுவே தான்

(மியான்மாரில் உள்நாட்டு கலகம்

நடந்தபோது எழுதபட்டது)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக