திங்கள், 14 ஏப்ரல், 2014

மண்(பூமி)

நீரும் சோறும்
நீ தந்தாலும்
அன்னையின் அமுதுக்குப்பின்
உன்னை நான் ருசித்தவன்.
எழாதபோது
அவள் மடியில்
எழுந்து தவழ்ந்தபோது
உன் மடியில்.
மண்ணே நீயும்
தாய் தான்
பிறக்கு முன்
அன்னையின் வயிற்றில்
இறந்த பின்
உன் வயிற்றில்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக