புதன், 2 ஏப்ரல், 2014

நாணமில்லையோ!


பொன்னிறம் கொண்ட

பெண்டிரைப் போல்

காலையிலே

கண் மலர்ந்து

அழகு முகத்தோடு

காத்து நின்று

வட்ட முகத்தழகன்

வரவு நோக்கி

வழிமேல் விழிவைத்து

அவன் தடம் பதிக்கும்

இடமெல்லாம்

உன் பார்வையை

பதிய வைத்தாய்.

அவனோ-உன்னைக்

காணாததுபோல்

கடந்து மறைய,

அந்தியிலே

உன் முகம்

வேதனை மேலிட

வாடிப்போகுதே.

பூவையருக்கு

நாணமுண்டு

சூரியகாந்தியே

உனக்கு மட்டும்

நாணமில்லையோ!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக