விளையாடி
மகிழ்ந்திருந்து
வீட்டுக்கு
வந்திடுவாய் என்றிருந்தேன்
வந்து சேராமல்-கண்ணே
வீதிக்கு என்னை வரவைத்தாயே
முப்பதடி ஆழ்துளையில்
வீழ்ந்தாலும்
பிழைத்திடுவாய் என்றிருந்தேன்
விதி செய்த
சதியாலே-செல்லமே
சொல்லாமல் எமலோகம்
போனாயே
ஆண் ஒன்றும், பெண்
ஒன்றுமென
அளவாய் தான்
பெற்றிருந்தேன்
இனி உன்னைக் காணாமல்-
கண்ணே
எப்படி உயிர்
வாழ்வேன் நானே.
அடுதடுத்து
குழந்தைகள் வீழ்ந்து மடிந்தும்
ஆழ்துளையை
மூடாமல்-உன்னையும்
அழித்துவிட்டார்களே
பாவிகள்- செல்லமே
பெத்த வயிறு பத்தி
எரியுதே
யாருக்கு
தீங்கிழைத்தோம்
யார் குடியை நாம்
கெடுத்தோம்
ஏனம்மா எனக்கிந்த
நிலை – கண்ணே
காலமெலாம் அழவைத்து
போனாயே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக