திங்கள், 28 ஏப்ரல், 2014

இறைவன் படைத்ததே.


பத்து மாதம் சுமந்திருந்தும்

பொண்ணா பொறந்ததால

பொத்தி வளர்க்காம

பொருளாதாரக் குறையென

பச்சிளம் சிசுவைக்

கொள்வது முறையோ?

 

தன் கருவைத் தற்காக்க

தாய்க்கு உரிமையில்லை,

ஆணை எதிர்கொள்ள

பெண்ணுக்கு வழியில்லை,

தாய் மனம் தவித்திருக்க

சேயின் உயிர் பறிபோனது

 

பேசும் பச்சைக்கிளிக்கு

உயிர் வாழ

உணவாகும் நெல்லு மணி,

பேசாத இந்த பாசக்கிளியின்

உயிரைப் பறிப்பதற்குக்

கொடிய விஷமானது

 

வறுமையில வாடுறவன்

பிறந்தபின்னே கொல்கின்றான்

வசதிபடைத்த செல்வந்தன்

கருவிலேயே கலைக்கின்றான்

ஆகமொத்தம் பெண்சிசுக்கள்

அழிந்துதான் போகிறார்கள்.

 

மாறிவரும் இப்பூவுலகில்

மங்கையரெல்லாம்

மகுடம் சூடி உயரும்போது

யாரும் இனி பாரமில்லை,

பிறக்கும் குழந்தையெல்லாம்

இறைவன் படைத்ததே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக