கருவறைவிட்டு
வெளிவரும்
சிசுவுடன்
கூடப்பிறக்கும்
மதம்
பருவத்தின் அழகு
பார்வையில் கசிய
ஏந்திடத்துடிக்கும்
இதயங்களின்
சங்கமம்
காதல்
மண்ணோடு
உறவாடும் மதம்
பெண்ணோடு
உறவாடும் காதல்
மண்ணுடன்
மதமும்
பெண்ணுடன்
காதலும்
போற்றப்படும்
இரண்டுக்கும்
கற்பனை அதிகம்
இல்லாதவற்றில்
நம்பிக்கை வைக்கும்
ஒத்தஅழகை
ஒருபோதும்
ஒத்துக் கொள்ளாது
இரண்டும்
ஒரே குடும்பமென
உணரவைத்து
மரியாதை பெற்றாலும்
மரணத்திற்கு
அழைத்து செல்லும்
காதல்
வாழும்போது
கனவுலகில்
சொர்க்கத்தைக்
காட்டும்
மதம்
மரணத்துக்குப்
பின்
சொர்க்க்த்துக்கு
வழிகாட்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக