ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

பதவிக் கனி பறிக்கத்தானே!


ஆலங்கட்டி மழை கொடுத்த

பனிக்கட்டி வரவாலே

ஊரு நிறைஞ்சு உள்ளம் குளிர்ந்து

வரும் நாளை எதிர்பார்த்துத்

தரவேண்டி காத்திருக்க

 

வையத்து வாக்கெல்லாம்

வளைத்து பிடித்து

கழுத்தில் விழும் பூமாலைக்கு

பட்டத்து யானை தேடி

பவனி வரும் பெருமகனார்

 

சுட்டெறிக்கும் கோடையிலே

சூடான வார்த்தையோடு

சூறாவளி காற்றுபோல

சுற்றி சுற்றி வருவதெல்லாம்

பதவிக்கனி பறிக்கத்தானே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக