வெட்டவெளி
பொட்டலிலே
கட்டியெழுப்பும்
கரையான்களே!
உன்னாலும்
முடியுமென
ஒற்றுமையாய்
பாடுபட்டு
இயற்கையின்
சீற்றத்தையும்
புறந்தள்ளி
உருவாகும் உன்வீடு.
ஊராரை
அஞ்சவைத்து
மதிப்புறும் நல்ல
பாம்பு
குடியேறும்
வக்கணையாய்
வந்தமர்ந்து
வாழ்ந்து காட்டும்
வஞ்சகர்போல்
வாழும் மக்களோ
பாலும் முட்டையும்
பாங்காய் படைத்து
பாம்பை வழிபடும்
இன்றைய
வாழ்க்கை முறையில்
எங்கும்
இப்படித்தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக