ஞாயிறு, 11 அக்டோபர், 2015

காணாமல் போனது




எழுந்த இடம் விட்டு
எங்கெங்கோ ஊர் சுற்றி
உண்டான களைப்பில்
உக்கிரம் தணிந்து
மெல்ல மெல்ல
தலை சாயுமாதவன்

வண்ணக் கலவையை
வாரி இறைத்து
வானத்தை ஒளியூட்ட வைத்து,
அந்தி பொழுதின்
பொன்னிற வெளிச்சம்
மண்ணை முத்தமிட்டு


ஒத்தையிலே நிக்கும்
ஓலக்குடிசை ஒன்றில்
கள்வனைப்போல் புகுந்து
வெளிவர முடியாமல்
தத்தளித்து
அங்குமிங்கும் ஓடி

சுவரு, அலமாரியென
ஏறிக் குதித்து, விழுந்து
அடிபட்டு, வேறு வழியின்றி
உறங்கியபோது

காணாமல் போனது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக