திங்கள், 5 அக்டோபர், 2015

தாயின் காலடியில்.




ஏழையாய் பிறக்கவைத்து
அதையும் ஊனமாக்கி
ஊமையாய் பிறக்க விட்டது
எல்லாம் வல்ல இறைவனுக்கு
எளிதாயிருக்கலாம்,

இது மனிதக் குற்றமல்ல
படைத்த இறைவனின்
குறைபாடு
இது தெய்வத்தின் குற்றம்

இறைவனின் அருளையும்,
அடைய ஆசைபடும்
சொர்க்கத்தையும்
எம்பெருமான் கொடுக்க நினைத்தாலும்
ஏற்குமா குழந்தை நெஞ்சம்?

சிறுவனே கவலை வேண்டாம்
உன் தாயின் காலடியில்
அத்தனையும் கொட்டிக்கிடக்கிறது

அன்னையை வணங்கி, அருளை பெறு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக