செவ்வாய், 20 அக்டோபர், 2015

விமர்சனம்




ஊரெங்கும்
உன் பேச்சு
என் உயர்வுக்கும்
மகிழ்ச்சிக்கும்
நீ தானே
நிதர்சன ஆதாரம்

உன் வரிவடிவத்
தாக்குதலில்
என் கண்கள்
விழித்ததுமுண்டு—கண்ணீர்
விட்டதுமுண்டு

என்னை தேடி
நீ வந்தபோதெல்லாம்
என் நெஞ்சம்
வருந்தியதுமுண்டு
திருந்தியதுமுண்டு

நன்பனைப்போல்
நெருங்கி பக்கம் வா
உன் நல்ல கருத்து
என் நேர்மைக்கு
என்றென்றும்

பக்க பலமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக