வறுமை தரும் மரணம்
இல்லாத ஏழைக்குக்
கல்வியைத் தராதது
அறியாமை தான்
வாழ வழியின்றி
வாடும் மக்கள்
அநுபவம் மூலம் கற்று
வழி தேடாததும் அறியாமை தான்
அறியாமையை
புறந்தள்ள—முழுமனதோடு
முயற்சி செய்
வெற்றி நிச்சயம்
அறியாதவற்றை
அறிந்து கொள்ள ஆசைபட்டு
அறிவைத்தேடு—அதுதான்
வாழ வழிகாட்டும்
மரண தண்டனை
நிறைவேறும் தருவாயிலும்
மாமேதை சாக்ரட்டீஸ்
மரணத்தை பற்றி
அறிந்து கொள்ள
ஆசைபட்டது—அவரின்
மன உறுதிக்கும், தேடலுக்கும்
ஓர் எடுத்துக்காட்டு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக