ஞாயிறு, 11 அக்டோபர், 2015

கவிதை



மண்ணை
முத்தமிட்டு
அரவணைக்கும்
மழைத்துளி

பூவின்
நறுமணத்தை
களவாடும்
இளந்தென்றல்

சூரியனின்
பார்வையில்
மதிமயங்கும்
கார்மேகம்

பெண்ணின்
ஆழ்மணத்தில்
ஒளிந்திருக்கும்
ஆசை

அநுபவமும்
வார்த்தையும்
இணைந்த
வார்ப்பு

உணர்வும்
உணர்ச்சியும்
சங்கமிக்கும்
படைப்பு

மொழியின்
சிக்கனத்தில்
ஒளிரும்
வைரம்

கற்பனையும்
சொல்லும்
கைகோர்க்கும்
புதுமை

மகிழ்வையும்
அதிர்வையும்
கொடுக்கும்
வரிகள்

தகவல்
ஒளிந்து நிற்கும்
சமுதாயம்

சிறப்பதற்கு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக