வியாழன், 22 அக்டோபர், 2015

தேடி அலைகிறேனே!

என்னோட வாழ்வை
உன்னில் தேடித் தேடி
எப்போதும்போல்
நாதியற்று நிற்கின்றேன்

எனக்கான உன்னை
என்னிடம் சேர்க்கவும்
உன்னிடம் கூறவும்
ஒருவனும் எண்ணலையே!

காவிரி ஆற்றை
கையெடுத்து கும்பிட்டும்
கைகொடுத்து உதவாம
கைவிரித்து போனதும்

முக்காடு போட்டு
முகத்தை மறைக்காத
அப்பாவி பெண்ணை
பாழ்படுத்திய பாவிபோல்

மூடி மறைக்காத
மேகங்கள்
விளை நிலத்தை
முடமாக்கி, தரிசாக்கியதும்

பத்தி எரியும் ஊரில்
கிடைத்தது ஆதாயமென
எடுத்து செல்லும்
பாமர மக்களைப்போல்

சுட்டெரிக்கும் சூரியன்
நிலத்து நீரையும் அபகரிக்க
சாகுபடி இல்லாம
சாகும்படி செய்ய

பாடுபட்ட விவசயி நான்
பயிரு விளையாம
வட்டி கட்ட முடியாம—கயிறைத்

தேடி அலைகிறேனே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக