சோகத்தை இதயத்தில்
சுமக்காதே
சொல்லி அழுது விடு
மனசு இலேசாகும்
மரணமும் தள்ளி போகும்
உளிபட்ட கல்
கலங்குவதில்லை
அழகு சிலையாகி
மரியாதை பெறுமென்ற
நம்பிக்கையில்
அதுபோல
துயரைக் கண்டு
துவண்டு விடாதே—நாளையது
அநுபவத்தைத் தந்து
உன் வாழ்க்கையை வளமாக்கும்
அனைவரோடும்
சேர்ந்து சிரித்து மகிழ்ந்திரு,
அழும்போது
தனிமையில் அழுதுவிடு
மாறி செய்தால்
மக்கள் நகைத்திடுவார்
சிரித்து மகிழ்ந்தது
மறந்து போகும்—ஆனால்
அழுத நினவு என்றும்
அழியாமல்
நெஞ்சில் நிலைத்திருக்கும்
உனக்காக அழுபவரை
உன் உயிருள்ள போதே
தேடி வைத்துக் கொள்,
இன்றைய சூழ்நிலயில்
இறந்தபின் எவனும்
திரும்பி கூட பார்க்கமாட்டான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக