புதன், 21 அக்டோபர், 2015

எப்படி கேட்பேன் அதிகம்?






ஓடியாடித் திரியும்
இளமைப் பருவத்தில்
மக்கள் அனைவரும்
ஒற்றுமையாய் அமைதியுடன் வாழ
இறைவனை வேண்டினேன்

ஓடிஓடி சம்பாதிக்கும்
நடுத்தர வயதில்
குடும்பம், குழந்தை, உறவு,
உதவிய மக்களென குறுகினாலும்
அவர்களைக் காக்க வேண்டினேன்

ஆடி,ஓடி அடங்கும்
முதிர்ந்த வயதில்
நோய், நொடி இல்லாது
படுத்துவிடாமல்—நடக்கும்போதே
முடிந்துவிட வேண்டினேன்

வலிமைக் குறைய குறைய
கேட்கப்படுவதும் குறையும்
இயற்கையின் நியதியது
மக்கள் எல்லோரும்
என்னைப் போலத்தான்

மறைந்திருக்கும் மாயவனே
என் வலிமை நானறிவேன்
உன் வலிமை முழுதுமாய்
அறியாதபோது—உன்னிடம்

எப்படி கேட்பேன் அதிகம்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக