ஞாயிறு, 25 அக்டோபர், 2015

கடவுள் உதவிடுவார்





பள்ளிப் பருவத்தில்
தேர்ச்சி பெறுவதற்கு
தெய்வத்தை வழிபட்டு
வெற்றி பெற்றது முதல்

உடல் வருத்தி
படித்ததையும் மறந்து
இறைவன் காத்திடுவானென
பழகிக் கொண்டது மனம்

கடவுள் காப்பாரென
நம்புவது தவறில்லை—அவர்
வந்து உதவாமல் போனால்
அது கடவுளின் தவறுமில்லை

கடவுளை நம்பு
அதே வேளையில்
உன் உழைப்பையும் நம்பி
செயலில் ஈடுபடு

தனக்கு தானே
உதவி செய்பவனுக்கும்
வேறுபாடின்றி

கடவுள் உதவிடுவார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக