வியாழன், 22 அக்டோபர், 2015

வேடிக்கையா/ வேதனையா?



படித்து அறிந்திருந்தும்,
பறவை, விலங்குகளை
நாம் பார்த்திருந்தும்
புரிந்து கொள்ளாமல்
வாழ்ந்து கொண்டிருக்கிறோம்

நம்முடைய அறியாமை
எள்ளி நகைக்கிறது,
எதிர்பாராமல்
சமூகத்தில் நடந்திடும்
சில அவலங்களைக் கண்டு

அந்நிய நாட்டு மக்கள்
மதமோ,நிறமோ பார்க்காமல்
மனிதநேயத்தோடு
ஒற்றுமையாய்
சேர்ந்து வாழும்போதும்

ஒவ்வொருவருக்கும்
பிறப்பும், இறப்பும்
பொதுவாயிருக்கையிலே
நம் நாட்டு மக்களுக்கு
சாதி என்ன ஒரு கேடா?

வெறி நாய்களின்
தெருச் சண்டைபோல்
சாதிக் கொடுமை
சமூக ஒற்றுமையை
சீரழிக்கிறது

நிழலாய்த் தொடரும்
சாதிப் பேயை
நிஜ மனிதர்கள்
அழிக்க முயலாதது
வேடிக்கையா/ வேதனையா?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக