வியாழன், 13 மார்ச், 2014

தனிமை


அல்லும் பகலும் மாடாய் உழைத்து

பொருளீட்டுவது தான் வாழ்க்கையோ!

பெத்தபிள்ளை தாயின் அன்புக்கு

நாளும் ஏங்கித் தவிப்பது தெரியலையோ!

 

அன்னையைப் பிரிந்து விண்ணையடையும்

மேக சிசு ஓங்கி அழுவதைக் கண்டதில்லையோ!

முட்டி மோதி மீண்டும் தாயிடம் வருவதை

மனிதன் இன்னும் உணரவில்லையோ!

 

படித்து, பட்டம் பெற்று வேலை தேடி

பிள்ளை வேற்று நாடு போனதில்லையோ!

பிரிந்து போகும் பிள்ளையைக் கண்டு

பெத்த மனம் ஏங்கித் தவிக்கவில்லையோ!

 

என்ன வாழ்க்கையடா இதுவென்று- மனம்

பழையதை எண்ணி வெறுப்பதில்லையோ!

 நாம்மட்டும் தனித்து விடப்பட்டோமென்ற

கவலை இப்போ உனக்கில்லையோ!

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக